இன்றைய செய்திகள் ஜூலை 11 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...
பாடகி எஸ். ஜானகி மறைவு: மு.க. ஸ்டாலின் இரங்கல்
பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி மறைவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி காலமானார்!
பிரபல பின்னணி பாடகி எஸ். ஜானகி வயது மூப்பு காரணமாக காலமானார்.
வியத்நாம் படகு விபத்தில் உயிரிழந்த 10 தமிழர்கள்: யார் யார்?
வியத்நாமில் சுற்றுலாப் படகு விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
வியத்நாம் படகு விபத்து வருத்தமளிக்கிறது: லாவா நிறுவனம் அறிக்கை!
வியத்நாம் படகு விபத்து தொடர்பாக லாவா நிறுவனம் இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
வியத்நாம் படகு விபத்து: முதல்வர் விஜய் இரங்கல்!
வியத்நாம் படகு விபத்தில் இந்தியர்கள் 15 பேர் பலியானதற்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெகவினர் தயாராக இருக்க வேண்டும்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்
உள்ளாட்சித் தேர்தலுக்கு தவெகவினர் தயாராக இருக்க வேண்டும் என்று அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரம் அருகே மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளர்கள் பலி
மாமல்லபுரம் அருகே ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியின்போது மின்சாரம் பாய்ந்து 4 தொழிலாளர்கள் பலியாகினர்.
அடுத்த 20 ஆண்டுகளும் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய்தான்! - என். ஆனந்த்
அடுத்த 20 ஆண்டுகளும் விஜய்தான் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பார் என்று அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
நடுக்கடலில் மூழ்கிய விசைப்படகு: தமிழக மீனவர்கள் 8 பேர் உயிர் தப்பினர்!
சென்னை காசிமேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் ஆந்திராவின் கிருஷ்ணாபட்டினம் அருகே விசைப்படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையைல் அப்படகு கடலில் மூழ்கியது.
கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம்: அப்பாவு
கரூர் சம்பவம் குறித்து பொதுவெளியில் பேசுவது இந்திய அரசியல் சட்டப்படி குற்றம் என்று முதல்வருக்கு தெரியாதா? என முன்னாள் பேரவைத் தலைவர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
இன்னும் ரூ.2000 நோட்டு வைத்திருக்கிறீர்களா? என்ன செய்ய வேண்டும்?
நாட்டில், பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூ.2000 நோட்டை யாராவது வைத்திருந்தால், அச்சப்பட வேண்டாம், அதனை இப்போதும் செல்லுபடியாகும் பணமாக மாற்றிக் கொள்ளலாம் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.
கரூரில் முதல்வர் விஜய் வழங்கிய வேலை! மசால்ஜி என்றால் என்ன?
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேரின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு, தமிழ்நாட்டில் உள்ள அரசு அலுவலகங்களில் அரசுப் பணி நியமன ஆணைகளை முதல்வர் ஜோசப் விஜய், நேற்று பயனாளிகளுக்கு நேரில் வழங்கினார்.
விரைவில் புதிய ஐஆர்சிடிசி இணையதளம்! முக்கியமான நான்கு மாற்றங்கள்!
விரைவில் ஐஆர்சிடிசியின் (IRCTC) புதிய இணையதளத்தின் பீட்டா வெர்ஷன் அறிமுகமாகவிருக்கிறது. இதன் மூலம் மிக விரைவாக டிக்கெட் முன்பதிவு செய்வது உள்ளிட்ட 4 மிக முக்கிய மாற்றங்கள் வருகின்றன.
திமுக - அதிமுக ஒன்றிணையுமா? எந்தக் கூட்டணியும் நியாயமே! டிடிவி தினகரன் பதில்
திமுகவும் அதிமுகவும் ஒன்றிணையுமா என்ற கேள்வி எழுப்புகிறீர்கள். ஆனால், அரசியல் சூழ்நிலை யாரை வேண்டுமானாலும் ஒன்றுசேர்க்கும்.
திமுக கூட்டணியில் இருப்பவர்களை தன் பக்கம் இழுத்து அமைச்சரவையில் இடமளித்து, தவெக கூட்டணியில் வைத்துக்கொள்வது நியாயமெனில், எந்தக் கூட்டணியும் நியாயம்தான்.
நேற்று தங்கம் வாங்கியிருந்தால் வருத்தப்படுவீர்கள்! இன்றைய விலை நிலவரம் (ஜூலை 11)
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 11, சனி) சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ. 1,06,400-க்கும் கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ. 13,300-க்கும் விற்பனையாகிறது.
விஜய்யின் வெற்றி நிற்காது, நிலைக்காது; அது ஒரு கானல் நீர்! அதிமுக
இன்று அமைந்திருக்கும் ஆட்சி ஒரு மைனாரிட்டி ஆட்சிதான். பல்வேறு கூட்டுக் கட்சிகளின் கலவை. இது திமுகவுடன் வெற்றிபெற்ற கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து அமைந்திருக்கிற ஓர் ஆட்சி. ஆனால், இந்த வெற்றி நிச்சயமாக நிரந்தரமானது அல்ல. இது கானல் நீர்: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தாக்கப்படாது: ஈரான் அறிக்கை வெளியிட அமெரிக்கா கெடு
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் தாக்கப்படாது என உறுதியளிக்க வேண்டும் என ஈரான் அறிக்கை வெளியிடுமாறு அமெரிக்கா கெடு விதித்துள்ளது.
மோடி ஆட்சியின்கீழ் 25 கோடி பேர் வறுமையில் இருந்து வெளிவந்துள்ளனர்: நியூஸி. பிரதமர்
இந்தியா - நியூஸிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் அந்நாட்டு பிரதமர் லக்ஸன் பேசியவாது, "நரேந்திர மோடி ஆட்சியின்கீழ், இந்தியாவில் தற்போது 25 கோடி பேர் வறுமையிலிருந்து வெளிவந்துள்ளனர். தற்போது 44 கோடி பேர் உள்ள நடுத்தர வர்க்கத்தினர், அடுத்த 10 ஆண்டுகள் முடிவில் 75 கோடியாக மாறுவர். இது ஒரு நம்பமுடியாத மாற்றம்" என்று தெரிவித்தார்.
தாய்நாட்டிற்காகத் தனது உயிரையே அர்ப்பணித்தவர் அழகு முத்துக்கோன்: முதல்வர் விஜய்
சுதந்திர போராட்ட வீரர் அழகு முத்துக்கோன் பிறந்தநாளையொட்டி, முதல்வரின் எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "ஆங்கிலேய ஆதிக்கத்திற்கு எதிராக விடுதலைக் குரல் எழுப்பிய சுதந்திரப் போராட்ட வீரர், மாவீரன் அழகு முத்துக்கோன் பிறந்தநாளில் எனது மரியாதையையும் வீர வணக்கத்தையும் செலுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.
இந்தியா - நியூஸிலாந்து இடையேயான வர்த்தக ஒப்பந்தம் ஒரு வரலாற்று மைல்கல்: பிரதமர் மோடி
நியூஸிலாந்துடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்த கையெழுத்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, "இரு கடல்சார் நாடுகளுக்கிடையேயான இந்த ஒத்துழைப்பு, இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்பை நிலைநாட்டும் முயற்சிகளை மென்மேலும் வலுப்படுத்தும். இந்த ஒப்பந்தம், இருதரப்பு உறவுகளுக்கும் புதிய வேகத்தையும் உத்வேகத்தையும் அளிக்கும் ஒரு வரலாற்று மைல்கல்" என்று பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.