FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரம்: அமைச்சரவை பகிர்வில் முடிவு கிடைத்ததா?

மகாராஷ்டிர அமைச்சரவை பகிர்வில் முடிவு எட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

Updated On : 11 டிசம்பர் 2024, 4:33 pm IST
மகாராஷ்டிரம் - கோப்புப்படம்.
பகிர்:

மகாராஷ்டிர அமைச்சரவை பகிர்வில் முடிவு எட்டியிருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் மகாயுதி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், அமைச்சரவைப் பகிர்வு இழுபறியாகவே இருந்து வருகிறது. இறுதியாக, அமைச்சரவைப் பகிர்வில் தீர்வு எட்டியிருப்பதாக கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

இதன்படி, முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார் இடையிலான (டிச. 10) சந்திப்பில் முக்கியமான துறைகளான உள்துறை, வருவாய் உள்ளிட்ட 22 துறைகளை பாஜகவும், நகர்ப்புற வளர்ச்சித் துறை உள்பட 11 துறைகளை சிவசேனையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு 10 துறைகளும் பிரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுதவிர வீட்டுவசதி, நீர்வளத் துறைகளையும் பாஜக மேற்கொள்ளும் என்றும் பாஜக வட்டாரத்தில் கூறுகின்றனர். மேலும், பதவிகளைவிட உரிமை கோருபவர்களின் எண்ணிக்கை அதிகமிருப்பதால், நியமனங்களை தீர்மானிக்க கட்சிகள் சிரமப்படுகின்றன. நியமனங்கள் தொடர்பாக சிவசேனை கட்சியினுள் மோதல்களை எதிர்கொள்கிறது. விவசாயம், பொதுப்பணித் துறைகளுக்கு இரு கட்சிகள் போட்டி போடுவதாகவும் தெரிகிறது. அதுமட்டுமின்றி, கடந்த அமைச்சரவையில் கறைபடிந்த அமைச்சர்களை நீக்குமாறு பாஜக வலியுறுத்தியது; ஆனால், அது கடினம் என்றும் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன.

அமைச்சரவை குறித்த ஒப்புதலுக்காக முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் இரண்டு நாள் பயணமாக டிச. 11, 12 ஆகிய தேதிகளில் தில்லி செல்கிறார். தொடர்ந்து, வெள்ளிக்கிழமை (டிச. 13) மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து, சனிக்கிழமையில் (டிச. 14) அமைச்சரவை பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறலாம் அல்லது டிச. 21 ஆம் தேதியில் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 230 இடங்களில் வெற்றி பெற்றது. இக்கூட்டணியில் 132 இடங்களுடன் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின. தனிபெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக சார்பில் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராக பதவியேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments