அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்!
அமெரிக்கா - இந்தியா வர்த்தக ஒப்பந்தத்தை எதிர்த்து, எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தியது பற்றி...
அமெரிக்கா - இந்தியா இடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்தத்துக்கு கண்டனம் தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஒப்பந்தமானது இந்தியாவுக்கு வைக்கப்பட்ட ’பொறி’ என்று விமர்சித்து, பதாகைகளுடம் எம்பிக்கள் முழக்கங்களை எழுப்பினர்.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் இணைந்து இன்று நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு ஆதரவாகவும் முழக்கங்களை எழுப்பினர்.
Advertisement
Advertisement
தொழிலாளர்கள் சட்டத்திருத்தம், வர்த்தக ஒப்பந்தங்கள், தனியார்மயமாக்கல், தொழிலாளர் மற்றும் விவசாய விரோத கொள்கைகள் உள்ளிட்டவைக்கு எதிராக நாடு முழுவதும் இன்று வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இந்தியா - அமெரிக்கா இடையே மேற்கொள்ளப்பட்டிருக்கும் வர்த்தக ஒப்பந்த விவகாரத்தில் ஆளும்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளன.
மக்களவையில் புதன்கிழமை உரையாற்றிய ராகுல் காந்தி, “இந்தியாவையும் பாரத மாதாவையும் விற்றதில் வெட்கமாக இல்லையா?” என்று கேள்வி எழுப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை ராகுல் காந்தி நேற்று முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
Opposition parties protest in Parliament against the US-India trade deal!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.