இன்றைய செய்திகள் ஜூன் 12 - நேரலை
முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்.
எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்
எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு இருந்துள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கொல்லூர் மூகாம்பிகை வெள்ளி வாள் காணிக்கை!
முதல்வர் விஜய் கொல்லூர் மூகாம்பிகை வெள்ளி வாள் காணிக்கை அளித்துள்ளார்.
மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீசிய சம்பவத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடுகளை வழங்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்
பாதிக்கப்பட்ட குறுவை விவசாயிகளுக்கு தகுந்த இழப்பீடுகளை ஏக்கர் வீதம் கணக்கிட்டு அரசு வழங்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை
திமுக ஆட்சியில் நடைபெற்ற பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தற்போதைய ஆட்சியிலும் குறையவில்லை என்று அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய்!
கர்நாடக மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழ்நாடு முதல்வர் விஜய் இன்று (ஜூன் 12) வழிபாடு மேற்கொண்டார்.
மேட்டூர் அணை நீர் திறப்பு எப்போது? அமைச்சர் வினோத் பதில்!
மேட்டூர் அணையில் 70 அடி நீர் இருப்பதால், திறக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தெரிவித்துள்ளார்.
பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! முதல்வருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்!
தமிழகத்தில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்று முதல்வர் விஜய்க்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) வலியுறுத்தியுள்ளார்.
சட்டப்பூர்வ நோட்டீஸ் பற்றி குறிப்பிடாதது ஏன்? - மீனாட்சி நடராஜன்
தேர்தல் ஆணையத்தின்ப் படிவம் 26-ல் சட்டப்பூர்வ நோட்டீஸ் குறித்து பதிவு செய்யும்படி, எந்தத் தகவலும் இடம்பெறவில்லை என்று காங்கிரஸ் தலைவர் மீனாட்சி நடராஜன் வெள்ளிக்கிழமை பேசியுள்ளார்.
கேரளத்தில் நிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
திமுக சாதனைகளுக்கு ஸ்டிக்கர் ஒட்டிய தவெக அரசு! உதயநிதி
ஜூன் 21 நீட் மறுதேர்வுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு!
பல ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லையா? ஐடிஆர்-யு வந்துவிட்டது!
ஒரு சில ஆண்டுகளாக வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதவர்களுக்காக ஐடிஆர்-யு கொண்டுவரப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிக் கட்டணங்களில் வெளிப்படைத்தன்மை தேவை: அமைச்சர் ராஜ்மோகன்
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும்(ஏஐ) வீடியோக்களுக்கு தமிழ் வளர்ச்சித்துறையின் தணிக்கை கட்டாயம் என பள்ளிக் கல்வி, தமிழ் வளா்ச்சி, செய்தி, விளம்பரத் துறை அமைச்சா் ஏ.ராஜ்மோகன் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.
அமர்நாத் யாத்திரை: பாதுகாப்பு குறித்து அமித் ஷா தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
அமர்நாத் யாத்திரைக்கான பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் தயார்நிலையை ஆய்வு செய்வதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் உயர்நிலை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹபீபி - வென்று காட்டினாரா மீரா கதிரவன்?
தமிழ்ச்சூழலில் அத்தி பூத்தாற்போல சில படங்கள் அவ்வப்போது தோன்றுகின்றன. அந்த வரிசையில் இயக்குநர் மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகி வெளியாகியிருக்கிறது ஹபீபி.
இரண்டாம் பாதியில் கம்பேக் அளித்த தென் கொரியா த்ரில் வெற்றி!
கால்பந்து உலகக் கோப்பையின் இரண்டாவது போட்டியில் தென் கொரியா 2-1 என செக் குடியரசு அணியை வீழ்த்தியது.
நிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
கேரளத்தில் ஒருவருக்கு நிஃபா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து தமிழகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து வரலாறு படைத்தது மெக்சிகோ!
கால்பந்து உலகக் கோப்பையில் மெக்சிகோ அணி 96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து தான் விளையாடிய முதல் போட்டியிலேயே முதல்முறையாக வென்று வரலாற்றுச் சாதனை நிகழ்த்தியுள்ளது.
அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க 8 வாரங்கள் கெடு
தமிழ்நாட்டில் அரசு நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்குவதை உறுதிசெய்ய உரிய நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பிக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேட்டூர் அணை பாசனத்துக்குத் திறக்கப்படாத ஜூன் 12!
மேட்டர் அணையின் 92 ஆண்டு கால வரலாற்றில் இன்று 61 ஆவது ஆண்டாக குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தமிழ்நாட்டின் நெல் உற்பத்தி பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
வெறும் ரூ. 730 தான் சேதம்! 25 ஆண்டுகளுக்குப் பிறகு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனை!
மதுரையில் நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ரூ. 730 மதிப்பிலான பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாக 3 பேருக்கு 25 ஆண்டுகள் கழித்து 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
சிபிஎஸ்இ தளத்தின் குறைகளை சுட்டிக்காட்டிய +2 மாணவருக்கு ஐஐடி-கான்பூரில் வேலை!
பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்ததால் மன உளைச்சல் ஏற்பட்ட மாணவர்களுக்கு இடையே, இந்த சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்த நிசர்கா அதிகாரிக்கு ஐஐடி-கான்பூரில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.
மேக்கேதாட்டு அணை திட்டம்: விரைந்து அனுமதி வழங்க பிரதமரிடம் சிவகுமார் கோரிக்கை
மேக்கேதாட்டு அணை திட்டத்தில் விரைந்து அனுமதி வழங்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் வலியுறுத்தியுள்ளார்.
இறங்கிய வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை: ஜூன் 12 விலை நிலவரம்?
ஆபரணத் தங்கத்தின் விலை இரண்டு நாள்களில் பவுனுக்கு ரூ.5,600 குறைந்த நிலையில், ஒரே நாளில் வெள்ளிக்கிழமை(ஜூன் 12) பவுனுக்கு ரூ.2,400 உயர்ந்துது ரூ.1,10,400-க்கு விற்பனையாகிறது. இந்த விலை உயர்வு நகை பிரியர்களை கவலை அடைந்துள்ளனர்.
அரசியலுக்குள் நுழையும் நடிகர் ராகவா லாரன்ஸ்!
நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் அரசியலுக்குள் நுழைவதாக அறிவித்துள்ளார்.
முடிவுக்கு வருகிறதா அமெரிக்கா - ஈரான் போர்? டிரம்ப் அறிவிப்பு
அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் இன்னும் ஒரு வாரத்துக்குள் முடிவுக்கு வந்துவிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ரூ.134.83 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
குறுவை நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் ரூ.134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.