இன்றைய செய்திகள் செப். 7 - நேரலை!
இன்றைய செய்திகள், முக்கிய அறிவிப்புகள் மற்றும் உடனடி நேரலை அப்டேட்களை அறிய இணைந்திருங்கள் - தினமணியுடன்...
முதல்வர் விஜய்க்கு வாழ்த்துகள்: தமிழிசை சௌந்தரராஜன்
கடந்த கால ஆட்சியின் ஊழல்களை வெளிப்படைத்தன்மையுடன் வெளிப்படுத்திய முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவிப்பதாக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சி. விஜயபாஸ்கா் மீது பண மோசடி புகாா்
பேரவைத் தோ்தலில் ‘சீட்’ வாங்கித் தருவதாகக் கூறி வாங்கிய ரூ.4 கோடியைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதாக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கருக்கு எதிரான செப். 15-க்குள் அறிக்கை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை அருகே மரத்தில் கார் மோதி விபத்து: 2 பேர் பலி, மூவர் காயம்
சிவகங்கை அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் 2 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
Advertisement
தங்கம் விலை குறைவு! வெள்ளி விலை? - செப். 7 விலை நிலவரம்!
வாரத்தின் முதல் நாளான இன்று(செப்.7) சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது.
எதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய விரும்பவில்லை! முதல்வர் விஜய் பேச்சு!
தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் போல அரசியல் செய்ய எனக்கு விருப்பமில்லை என்று பேரவையில் இன்று காவல்துறை மானியக் கோரிக்கை மீது பதிலுரை ஆற்றிய முதல்வர் ஜோசப் விஜய் கூறினார்.
இதுதான் திமுக, இவ்வளவுதான் திமுக! பேரவையில் பேசிய முதல்வர் விஜய்!
பேசிப் பழகிய பொய், வாங்கிப் பழகிய கை, போட்டுப் பழகிய பை, இதுதான் திமுக. இவ்வளவுதான் திமுக என்று தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கூறியுள்ளார்.
மிஸ்ட்ர் க்ளீன் என்று சொல்லிக் கொள்பவர்களே! ஒரு மணி நேரம் பேசிய முதல்வர் விஜய்!
எதைப் பற்றி பேசினாலும் ஆதாரம் ஆதாரம் என்று கேட்பார்கள். ஆதாரங்களை பக்கத்திலேயே வைத்துக் கொண்டு என்று பேரவையில் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து முதல்வர் ஜோசப் விஜய் பேசினார்.
முதல்வர் பதிலுரைக்குப் பின் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுப்பு: திமுகவினர் வெளிநடப்பு
சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியினர் பேச அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி, பேரவையைவிட்டு திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
திமுகவின் போலி பிம்பம் உடைக்கப்படும்: முதல்வர்
அரை நூற்றாண்டுக்கும் கீழே ஆழமாகச் சென்று, தோண்டியெடுத்து, மக்களை ஏமாற்றுகிற அந்த போலி பிம்பத்தையும் போலி பிராண்டையும் உடைக்கப்படும் என்று எச்சரிக்கையாக அல்லாமல் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்: முதல்வர்
ஒரு குற்றச் சம்பவத்துக்காக ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்ததாகக் கூற முடியாது: முதல்வர் பதிலுரை
"குற்றத்தைப் பார்க்கும் பார்வையில் மாற்றம் வேண்டும். ஒரு குற்றம் நடைபெற்று விட்டது என்பதற்காக, ஒட்டுமொத்த மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று கூறிவிட முடியாது.
தனிப்பட்ட குற்றச் சம்பவத்துக்கும் மாநிலத்தின் ஒட்டுமொத்த சட்டம் - ஒழுங்கு நிலைக்கும் வேறுபாடு இருக்கிறது. ஒரு குற்றம் நடைபெற்று விட்டபிறகு, அதற்கான பொறுப்பை அரசு மீது சுமத்தி, மற்றவர்கள் ஒதுங்கிவிட முடியாது": முதல்வர் விஜய்
மேட்டூர் அணை நீர் திறப்பு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி கார் மோதி இளைஞர் பலி; ஓட்டுநர் கைது
சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு சொந்தமான கார் மோதிய விபத்தில் இளைஞர் பலியானார். இதனையடுத்து, விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், ஓட்டுநர் சின்ன அக்னியை கைது செய்தனர்.
பேரவையில் மக்கள் பிரச்னைகளை முதல்வர் இன்று பேசுகிறாரா?
இன்றைய சட்டப்பேரவையில் முதல்வர் விஜய் பதிலுரை வழங்கவுள்ள நிலையில், மக்களின் பிரச்னைகள் குறித்தும் அவர் பேசுவார் என அமைச்சர் கீர்த்தனா தெரிவித்துள்ளார்.
பணக்கார விநாயகர் சிலைக்கு ரூ. 703.27 கோடி காப்பீடு!
வருகிற விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, மும்பையில் ஜிஎஸ்பி சேவா மண்டல் நடத்தும் விநாயகர் சதுர்த்தி விழாவில் விநாயகர் சிலை மற்றும் பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில்கொண்டு, ரூ. 703.27 கோடிக்கு காப்பீடு எடுக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் இன்று விவாதம் இருக்காது: ஜேசிடி பிரபாகர்
இன்றைய சட்டப்பேரவைத் தொடரில் காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை குறித்த முதல்வர் விஜய்யின் பதிலுரைக்குப் பிறகு விவாதம் இருக்காது என பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.