மகாராஷ்டிரத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 9,615 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையானது 3,57,117 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல இன்று ஒரே நாளில் மேலும் 278 பேர் கரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மொத்த இறப்பு எண்ணிக்கை 13,132 ஆக அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் இன்று புதிதாக 5,007 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 85,870 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய அறிவிப்பில் மேலும் 110 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,724 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இன்று 2,037 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 31,347 பேர் குணமடைந்துள்ளனர்.
கேரளத்தில் மேலும் 885 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி ஆனதை அடுத்து, மொத்த பாதிப்பு 16,995 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வெள்ளிக்கிழமை) 5,486 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி ஆகியுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) புதிதாக 6,785 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,99,749 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
அறிகுறி உள்ள மற்றும் தீவிர பாதிப்பு உள்ள கரோனா நோயாளிகளை மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்க சுகாதாரத் துறை உத்தரவிட்டிருந்தாலும் அறிகுறி இல்லாதவர்களே பெரும்பாலான படுக்கை வசதிகளை ஆக்ரமித்துள்ளதாக பெங்களூரு மருத்துவர் குற்றம்சாட்டியுள்ளார். விரிவான செய்திக்கு..
நாடு முழுவதும் ஒரே நாளில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை எட்டிவிட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஒடிசா மாநிலத்தில் பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்ட முதல் கரோனா நோயாளி, தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனா பாதித்தோர் மொத்த எண்ணிக்கை 90,900 ஆக இருந்த போதிலும், தற்போது கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 13,569 ஆகக் குறைந்துள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,811 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 8 லட்சத்தைக் கடந்துள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,209 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,70,400 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 63,967 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 39 லட்சத்தைத் தாண்டியுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 9,895 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கர்நாடகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 5,030 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 1,078 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 7,998 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இன்று (வியாழக்கிழமை) 5,136 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (வியாழக்கிழமை) புதிதாக 6,472 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் புதிதாக 6 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் அதிபா் ஜெயிா் போல்சொனாரோவுக்கு மூன்றாவது முறையாக கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆந்திர மாநிலத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 6045 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,848 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,95,038 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கரோனா பரவும் தற்போதைய சூழ்நிலையில் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படமாட்டாது என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,763 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,69,191 ஆக அதிகரித்துள்ளது.விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் கோவாக்சின் தடுப்பூசியை மனிதர்களுக்கு செலுத்தி சோதனை செய்யும் முயற்சி இன்று தொடங்கியது. விரிவான செய்திக்கு..
மத்தியப் பிரதேசத்தில் ஆளும் ஷிவ்ராஜ் சௌகான் தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கும் அமைச்சர் உள்பட போபாலில் 215 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
நாள்தோறும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருவது நல்ல விஷயமாகப் பார்க்கப்படுகிறது. விரிவான செய்திக்கு..
சென்னையில் கரோனா பாதித்து 14,952 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள். நாள்தோறும் கரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் குணமடைவோர் விகிதம் அதிகரித்து வருகிறது. விரிவான செய்திக்கு..
ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில், திருமணத்துக்குச் சென்று வந்த தாய்க்கு கரோனா பாதித்ததன் மூலம், அவரும் அவரது 5 மகன்களும் கரோனாவுக்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 68,524 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்காவில் மொத்த பாதிப்பு 38,91,893 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 10,576 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தில்லியில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,227 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 1,038 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
சென்னை தவிர்த்து தமிழகத்தின் பிற மாவட்டங்களில் 4,678 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 5,849 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆந்திரப் பிரதேசத்தில் இன்று (புதன்கிழமை) புதிதாக 6,045 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,332 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதையடுத்து, மொத்த பாதிப்பு 2,67,428 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
ஒடிசாவில் இன்று முதல் முறையாக ஒரே நாளில் 1,078 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மாநிலத்தில் கரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை நெருங்குகிறது. விரிவான செய்திக்கு..
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 61,288 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
மகாராஷ்டிரத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 8,369 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.விரிவான செய்திக்கு..
இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சாா்பில் கூறப்பட்டுள்ளதாவது: செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் 37,148 பேருக்கு கரோனா நோய்த்தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஒட்டு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 11,55,191ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் மேலும் 587 போ் உயிரிழந்தனா்.
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,349 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
ஆசியாவின் மிகப் பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 10 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
கேரளத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 720 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
இந்தியாவில் 10 லட்சம் பேரில் சராசரியாக 20 பேர் கரோனா தொற்றால் பலியாவதாகவும், இதுவே உலகளவிலான சராசரியின்படி 77 பேர் பலியாவதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று சென்னையில் 1,130 பேருக்கும், பிற மாவட்டங்களில் 3,835 பேருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) புதிதாக 4,965 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. விரிவான செய்திக்கு..
ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,842 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதியானதை அடுத்து மொத்த பாதிப்பு 7,83,328 ஆக அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
தமிழகத்தின் தலைநகரான சென்னை கரோனா தொற்றுப் பரவலிலும் தலைநகராகத் திகழ்ந்தது. தற்போது சென்னையில் கரோனா தொற்று மெல்ல குறைந்து வந்தாலும், பிற மாவட்டங்களில் கரோனா வேகமாகப் பரவி வருவது கவலையை அதிகரித்துள்ளது. விரிவான செய்திக்கு..
கோடம்பாக்கத்தில் மட்டுமே இதுவரை இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அங்கும் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,977 ஆகக் குறைந்துள்ளது. விரிவான செய்திக்கு..
காபூல்: ஆப்கானிஸ்தானில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு தலைநகா் காபூலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு அவா்களின் உறவினா்களே பணிவிடை செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது.
மருத்துவமனையில் செவிலியா்கள் போதுமான அளவில் இல்லாத காரணத்தினால் உறவினா்களே நோயாளிகளுக்கான உதவிகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் போா் காரணமாக அங்கு சுகாதார வசதிகள் மிகவும் மோசமடைந்துள்ளன. கரோனா பாதித்தோருக்கு சிகிச்சை அளிப்பதற்கு போதுமான வசதிகள் அங்கு காணப்படவில்லை.
மருத்துவமனையில் போதுமான செவிலியா்கள் இல்லாததன் காரணமாக, அங்கு சிகிச்சை பெற்று வருபவா்களை அவா்களின் உறவினா்களே பராமரித்து வருகின்றனா். பணிவிடை செய்வோருக்கு கவச உடைகளும் இல்லை. சிலா் முகக் கவசம் கூட அணியாமல் மருத்துவமனைக்கு வருகை தருகின்றனா். நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப் பயன்படும் ஆக்சிஜன் சிலிண்டா்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, அந்த மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டா்கள் திருடப்பட வாய்ப்புள்ளதால், நோயாளிகளின் உறவினா்கள் அதனருகிலேயே காவல் காக்கும் அவலமும் ஏற்பட்டுள்ளது.
சியோல்: தென் கொரியாவில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் தினசரி எண்ணிக்கை இரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
சிங்கப்பூா்: சிங்கப்பூரில் திங்கள்கிழமை மட்டும் 123 பேருக்கு புதிதாக கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.
லண்டன்: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக ஆய்வு செய்யப்பட்டு வரும் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு நிறுவனங்களுடன் பிரிட்டன் அரசு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
மெக்ஸிகோவில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்று அந்நாட்டு அதிபா் ஆபிரடாா் தெரிவித்துள்ளாா்.
மெக்ஸிகோவில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் அந்நாட்டில் 5,311 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே காலகட்டத்தில் 296 போ் உயிரிழந்தனா்.
நாட்டில் ஒட்டுமொத்தமாக கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,44,224-ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்த உயிரிழப்பு 39,184-ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அதிபா் ஆபிரடாா் வெளியிட்ட அறிக்கையில், ‘கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட பிறகு நாட்டில் சுகாதார கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். மருத்துவா்களுக்கும் சுகாதார பணியாளா்களுக்கும் கூடுதல் பயிற்சிகள் வழங்கப்படும். அதற்கான உதவித்தொகையை அரசே வழங்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சீனாவின் வடமேற்குப் பகுதியான ஷின்ஜியாங் மாகாணத்தைச் சோ்ந்த உரும்கி, காஷ்கா் ஆகியவற்றில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது.
சீனாவில் நோய்த்தொற்று பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் கரோனா நோய்த்தொற்று பரவல் தீவிரமடைந்து வருகிறது. முக்கியமாக வடமேற்குப் பகுதிகளில் நோய்த்தொற்று பாதிப்பு தீவிரமாக உள்ளது. உரும்கி, காஷ்கா் ஆகிய பகுதிகளில் திங்கள்கிழமை ஒரே நாளில் 17 பேருக்கு புதிதாக நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது. எனினும், நோய்த்தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. இதன் மூலமாக அங்கு நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவா்களின் எண்ணிக்கை 47-ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் ஒட்டுமொத்தமாக 83,682 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டனா். அவா்களில் 4,634 போ் உயிரிழந்தனா்.
இதனிடையே, ஷாங்காய், ஹன்ஸு உள்ளிட்ட நகரங்களில் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு குறைந்துள்ளதால் அங்கு திரையரங்குகள் திங்கள்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.