அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ்: இந்திய வீரர் சாம்பியன்
அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை இந்தியாவின் அர்ஜூன் அரிகைசி வென்றுள்ளார்.
அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியை இந்தியாவின் அர்ஜூன் அரிகைசி வென்றுள்ளார்.
அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் கடைசி சுற்றில் ஸ்பெயின் கிராண்மாஸ்டர் டேவிட் ஆண்டனை எதிர்கொண்டார் இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி. கடைசி சுற்றுக்கு முன்பு 3 இந்திய வீரர்கள் உள்பட 9 வீரர்கள் 6 புள்ளிகளைப் பெற்றிருந்தார்கள். இதனால் கடைசி சுற்றில் கட்டாயம் வெற்றி பெற வேண்டிய நிலைமையில் இருந்தார் அர்ஜுன். கடைசி சுற்றை வென்ற அர்ஜுன், 9 சுற்றுகளின் முடிவில் 7.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றார். இதன்மூலம் அபுதாபி மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் சாம்பியன் ஆகியுள்ளார்.
இந்த வெற்றியின் மூலம் செஸ் தரவரிசையில் 2724 புள்ளிகளுடன் 24-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளார் அர்ஜுன். இவருக்கு முன்பு விஸ்வநாதன் ஆனந்த் 2756 புள்ளிகளுடன் 12-ம் இடத்திலும் குகேஷ் 2728 புள்ளிகளுடன் 20-ம் இடத்திலும் உள்ளார்கள்.
Advertisement
Advertisement
Related Article
சொந்த மண்ணில் இத்தனை டெஸ்டுகளா?: ஜேம்ஸ் ஆண்டர்சன் புதிய சாதனை
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: பிரணாய் காலிறுதிக்குத் தகுதி
2023 ஒருநாள் உலகக் கோப்பையில் நிச்சயம் விளையாடுவேன்: டிரெண்ட் போல்ட்
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப்: சாய்னா நெவால் தோல்வி
கவுன்டி கிரிக்கெட்டில் விளையாடும் ஷுப்மன் கில்
சென்னை செஸ் ஒலிம்பியாடில் விளையாடிய ஹரிகாவுக்குப் பெண் குழந்தை!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.