FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

இன்றைய (ஜூலை 29) செய்திகள் - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

Updated On : 29 ஜூலை 2026, 9:40 am IST
மு.க. ஸ்டாலின் | விஜய் | செந்தில் பாலாஜி
பகிர்:
Updated On : 29 ஜூலை 2026, 9:40 am IST

கொளத்தூரில் மறுவாக்கு எண்ணிக்கை!

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் போட்டியிட்டு தோல்வியடைந்த கொளத்தூர் தொகுதியில் மறுவாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மொத்தமாக 14 மின்னணு எந்திரங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது.

Updated On : 29 ஜூலை 2026, 9:40 am IST

செந்தில் பாலாஜி வீடு, ஆதரவாளர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கரூரில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு குறிப்பு போலீசார் புதன்கிழமை காலை 6 மணி முதல் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On : 29 ஜூலை 2026, 9:40 am IST

சென்னை – செய்யாறு இடையே 4 வழிச்சாலை: திமுக ஆட்சியில் போடப்பட்ட டெண்டர் ரத்து!

சென்னை - செய்யாறு சிப்காட் பகுதியை இணைக்க நான்கு வழி சாலை அமைப்பதற்காக போடப்பட்ட டெண்டரை தமிழ்நாடு அரசு ரத்து செய்துள்ளது.

Advertisement

Advertisement

Updated On : 29 ஜூலை 2026, 9:40 am IST

சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 29) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் வேட்புமனு தகவல்கள் தொடர்பான வழக்கு, துணைவேந்தர்கள் நியமன வழக்கு உள்பட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஜூலை 29) விசாரணைக்கு வருகின்றன.

Updated On : 29 ஜூலை 2026, 9:40 am IST

டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி!

தமிழக அரசுப் பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments